• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக-கேரள எல்லை; ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்குள் நுழையும் செயல்கள் தடுத்து நிறுத்த முடியாமல் அதிகாரிகள் திணறல்

March 24, 2020 தண்டோரா குழு

தமிழக கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடி வழியாக ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்குள் நுழையும் செயல்கள் தடுத்து நிறுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

தமிழக-கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் ஆம்புலன்ஸ்கள் மூலம் கேரளாவில் இருந்து பொதுமக்கள் கோவைக்கு அனுப்பப்படுவதாக அதிகாரிகள் மனம் நொந்து கொள்கின்றனர்.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல எல்லைகள் அனைத்தும் வைரஸ் பாதிப்புகள் பரவாமலிருக்க மூடப்பட்டுள்ளது.மேலும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தமிழக-கேரள எல்லையான வாளையார் பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்குள் பொதுமக்கள் அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சட்டவிரோதமாக சைரன் எழுப்பி பொதுமக்களை அழைத்து வரும் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்திய போது கேரளாவில் தவறான வதந்திகள் பரப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து கேரளா போலீஸ் உதவியுடன் சட்டவிரோதமாக கோவை எல்லைக்குள் மக்கள் அனுப்பப்படுகின்றனர். இது எல்லையில் சோதனை மேற்கொள்ளும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதேபோல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் பொதுமக்கள் எங்களை விரைவாக பரிசோதனை செய்து வீட்டுக்கு அனுப்பும் படி கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் படிக்க