March 20, 2020
தமிழக – கேரள எல்லையில் வாகனங்கள் செல்ல இன்று மாலை முதல் அனுமதி இல்லை என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கேரள மாநில எல்லையோரத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகள் இன்று (20-02-2020) மாலை முதல் மூடப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும், கேரள மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் அனைத்து வாகனம் தொடர்பு நிறுத்தி வைக்கப்படுகிறது
என கோவை மாவட்ட மாவட்ட ஆட்சி தலைவர் கு. இராசாமணி தெரிவித்துள்ளார்.