• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக அரசு மருத்துவர் சங்கம் நடத்திய போராட்டம் வாபஸ்

May 5, 2017 தண்டோரா குழு

அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவர் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

மருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, மீண்டும் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மருத்துவர்கள் கடந்த 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனையடுத்து, மருத்துவர்கள் போராட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், போராட்டத்தை திரும்ப பெற்று பணிக்கு திரும்புமாறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறி இருந்தனர். மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் அரசு எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப்பேச்சுவார்த்தையில் நோயாளிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போராட்டத்தை திரும்பப்பெறுவதாக மருத்துவ மாணவர்கள் கூறியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மேலும் படிக்க