• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா உறுதி

April 1, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சுகாதரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்,

தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தது டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 190 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது.இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள்.
தமிழகத்தில் 77,330 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 17 பரிசோதனை கூடங்கள் செயல்படுகின்றன.

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வருமாறு நேற்று தமிழகஅரசு அழைப்பு விடுத்திருந்தது. அழைப்பையேற்று 19 மாவட்டங்களை சேர்ந்த 1103பேரும் ஒரே நாளில் தாமாக முன்வந்து அரசை தொடர்புகொண்டு தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளார்கள். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். வயதானவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வராமல் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க