• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் பாஜக தனித்து தேர்தலை சந்திக்கும் சூழல் இல்லை – தமிழிசை சவுந்திரராஜன்

February 9, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் பாஜக தனித்து தேர்தலை சந்திக்கும் சூழல் இல்லை எனவும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

ஒவ்வொரு முறையும் பிரதமரின் வருகையின் போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பிரதமரின் வருகையை ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்நோக்குகிறது. பாஜக அரசு மீது விமர்சனங்களை வைக்க முடியாத எதிர்கட்சிகள் ரபேல் என்ற செத்த குதிரையை வைத்து அரசியல் செய்துவருகிறது. பிரதமரை விமர்சிக்க மமதா பானர்ஜிக்கு என்ற தகுதியும் இல்லை.தமிழகத்தில் 6 மாதங்களுக்கு முன்பே பாஜக தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டது. பிரதமர், பாஜக தேசிய தலைவர், அமைச்சர்களின் வருகை பாஜகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கூட்டணி அமைத்து தான் போட்டி என பாஜக ஏற்கனவே அறிவித்துள்ளது. கமலஹாசன் ஆறு மாதங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்தவர் என்பதால் பாஜக ஆட்சியை மதிப்பிட முடியாது இவ்வாறு அவர் கூறியுள்ளார்

மேலும் படிக்க