• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,937 -ஆக உயர்வு

April 27, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்று 52 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று மேலும் 52 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா
பாதித்தோர் எண்ணிக்கை 1,937 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் அதிகளவாக சென்னையில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியானது. மதுரையில் 4 பேருக்கும், விழுப்புரத்தை சேர்ந்த ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியானது.இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 81 மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,101 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது.நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 838 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 809ஆக குறைந்தது.

இன்றைய கொரோனா பாதிப்பு – தமிழக நிலவரம்:

மொத்த பாதிப்பு – 1,937
இன்று உறுதியானவர்கள் – 52
குணமடைந்தவர்கள் – 1,101
உயிரிழப்பு – 24
சிகிச்சை பெறுபவர்கள் – 809
மொத்த பரிசோதனைகள் – 94,781
இன்றைய பரிசோதனைகள் – 7,176
பாதிக்கப்பட்டோரில் ஆண்கள் – 1,312,
பெண்கள் – 625

மேலும் படிக்க