• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக அதிகரிப்பு

April 2, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 309 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழ்நாட்டில் கொரானா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மேலும் 75 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 74 பேர் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.மொத்தம் உள்ள 309 பேரில் 264 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். தமிழ்நாட்டில் 17 கொரானா பரிசோதனை மையங்கள் உள்ளது.மேலும் 6 மையங்கள் இந்த வாரம் இணைக்கப்படும்.இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 20 மாவட்டங்களில் கொரானா பாதிப்பு பரவியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.86,342 பேர் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று 77,000-ஆக இருந்த வீட்டுக் கண்காணிப்பு, 86,342-ஆக அதிகரித்து விட்டது என்றார்.

மேலும் படிக்க