March 21, 2020
தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரசுக்கு இந்தியாவில், இதுவரை 298 பேர் பாதிக்கப்பட்டள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் ஏற்கனவே 3 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவருக்கும், நியூசிலாந்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.