• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க முடியாது – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

January 13, 2018 தண்டோரா குழு

கர்நாடகாவிற்கு தேவையான தண்ணீர் குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க முடியாது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமி காவிரி தண்ணீர் தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு இன்று கடிதம் எழுதியிருந்தார். அதில், காவிரியில் 15 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். தமிழக விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக 7 டி.எம்.சி., தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும். எஞ்சிய நீரை 2 வாரத்தில் திறந்து விட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்த சித்தராமையா ‛ கர்நாடகத்திற்கு தேவைப்படும் தண்ணீர் அளவை விட குறைவாகவே இருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது. இது குறித்த வழக்கில் அடுத்த மாதம் இரு மாநிலங்களுக்கும் நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம்.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க