• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தன் உயிரை பணையம் வைத்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்

May 13, 2017 தண்டோரா குழு

விரைவு ரயில் வரும் பாதையில் ஓடி தற்கொலை செய்துக்கொள்ள முயன்ற மாணவியை ரயில்வே ஊழியர் தடுத்து காப்பாற்றியுள்ளார்.

தென் கிழக்கு சீனாவின் புசியன் மாகாணத்தில் உள்ள ரயில் நிலையத்தில் விரைவு ரயில் ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அப்போது அந்த பாதையில் ஒரு கல்லூரி மாணவி ஒருவர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தாள்.

அவர் தற்கொலை செய்ய முயற்சி செய்கிறாள் என்று உணர்ந்த அங்கிருந்த ஒருவர் வேகமாக ஓடி, அவரை பிடித்து இழுத்துள்ளார்.

எனினும், அவரையும் மீறி தற்கொலை முயன்றுள்ளார் அப்பெண். ஆனாலும் அந்த நபர் அப்பெண்ணை பிடித்து இழுத்துள்ளார். அப்போது அந்த நபரின் தலை அருகிலிருந்த கான்கீரிட் மீது மோதியது. அதையும் பொருட்படுத்தாமல், அவளை விடுவதாக இல்லை என்று அவளுடைய கைகளை இருக்க பிடித்தார்.

சில நிமிடம் கழித்து, விரைவு ரயில் வந்து சேர்ந்தது. இவர்களுடைய நிலையை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர்.தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த கல்லூரி மாணவியின் உயிரை காப்பாற்றிய அந்த நபர் ரயில் நிலைய ஊழியர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க