• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தண்ணீர் தேடி சென்ற 5 மான்கள் வாகனம் மோதி உயிரிழப்பு

April 13, 2017 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே குடிநீர் தேடி சென்ற 5 புள்ளி மான்கள் அதிவேகமாக சென்ற வாகனம் மோதி உயிரிழந்தன.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள கோதபள்ளம் வண்ணத்தங்கரை குளத்தில் அதிகளவில் புள்ளிமான்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் குளம் வறண்டுள்ளதால் மான்கள் குடிநீர் தேடி அவ்வப்போது அருகில் உள்ள கிராமப்பகுதிக்குள் நுழைகின்றன.

இந்நிலையில், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் கூட்டமாக குடிநீர் தேடி ஊருக்குள் செல்ல வழித்தவறி, சேலம் – கொச்சின் தேசிய ஆறுவழி நெடுஞ்சாலையை கடக்க முயன்றன. அப்போது அதிவேகத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த ஐந்து புள்ளிமான்கள் உயிரிழந்தன.

மேலும் படிக்க