February 13, 2018
தங்க தமிழ்ச்செல்வனை அமைச்சராக்க நினைத்தோம், ஆனால் அவர் பிரிந்து சென்றுவிட்டார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில்அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் வேலுமணி,பேரவையில் ஜெயலலிதா பட திறப்பு விழாவுக்கு டிடிவி தினகரன் ஏன் வரவில்லை?கட்சியை விட்டு 10 வருடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததாலேயே டிடிவி.தினகரன் ஜெயலலிதாவின் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றார்.
மேலும், தங்க தமிழ்ச்செல்வனை அமைச்சராக்க நினைத்தோம், ஆனால் அவர் பிரிந்து சென்றுவிட்டார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.