• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தங்கள் மகன்கள் மீது பொய்யாக கஞ்சா வழக்கு பதிவு செய்துள்ளதாக பெற்றோர்கள் மனு

August 3, 2022 தண்டோரா குழு

கோவை மாநகரில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆர்.எஸ்.புரம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டதாக கூறி ஆர்.எஸ்.புரம் போலிசார் ஒரு வட மாநில நபரையும் அதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன் இரத்தினபுரி காவல்துறையினர் 1 நபரையும் கைது செய்தனர்.

மேலும் கஞ்சா சாக்லேட் விற்பனையில் தொடர்பு உள்ளதாக கூறி இரத்தினபுரி, டாடாபாத் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் மீது ஜூலை 30ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில இளைஞர்களின் பெற்றோர்கள் தங்கள் மகன்கள் மீது இரத்தினபுரி போலிசார் பொய்யாக கஞ்சா விற்பனை தொடர்பாக வழக்கு பதிவு செய்யந்துள்ளதாக கூறி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்,

தங்கள் மகனுக்கும் இந்த வழக்கிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும், காவல்துறை முறையாக விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளியை மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கேட்டு கொண்டனர்.

மேலும் படிக்க