• Download mobile app
01 May 2026, FridayEdition - 3733
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லியில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் 110- பள்ளி மாணவர்கள் பாதிப்பு

May 6, 2017 தண்டோரா குழு

டெல்லியில் பள்ளி அருகே வாயுக்கசிவு ஏற்பட்டதில் 110 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களை பார்க்க அவர்களது பெற்றோர்கள் குவிந்ததால் அங்கு பரப்பு நிலவியது.

தெற்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ள ராணி ஜான்சி சர்வோதயா கன்யா பள்ளி (அரசுப்பள்ளி) அருகே நின்று கொண்டிருந்த ஒரு கண்டெய்னர் லாரியில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டது.

இந்த வாயுக்கசிவால் பள்ளி மாணவர்களுக்கு மயக்கம் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுமார் 110 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாயு கசிந்த இடத்திற்கு விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் வாயுக்கசிவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களிடம் தொலைபேசியில் பேசியதாக டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோசாடியா தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க