November 30, 2020
தண்டோரா குழு
டெல்லியில் போராட்டம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் உட்பட விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இலட்சக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக அதன் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரியும் தலைநகர் டெல்லியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கைகளில் தென்னங்கன்று, வாழை,மாமர கன்று உள்ளிட்ட விவசாய பயிர் செடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் என தெரிவித்தனர்.