• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் சந்திப்பு

March 28, 2017 தண்டோரா குழு

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர்.

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் வேண்டும். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடன் தள்ளுபடி மற்றும் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கை மனுவை அளித்தனர்.

மேலும், விவசாயிகள் காலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தனர்.

மேலும் படிக்க