• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“டி.என்.ஏ. சோதனை செய்ய திட்டம்” – ஆதார் வழக்கில் மத்திய அரசு வாதம்

May 2, 2017 தண்டோரா குழு

கைரேகை எடுப்பதற்கே கேள்வி எழுப்புகிறீர்களே? அடுத்து டி.என்.ஏ. சோதனை செய்ய திட்டம் வைத்துள்ளோம் என ஆதார் வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியுள்ளார்.

ஆதார் அட்டை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் வழக்கில் மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர்முகுல் ரோஹத்கி ஆஜரானார்.

அப்போது அவர் கூறுகையில்,

ஆதார் அட்டைக்கு கைரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்வதில் எந்த தவறும் கிடையாது.சமுதாயத்தை ஒழுங்குபடுத்த ஆதார் போன்றவை அவசியம்அதற்காக மரபணு சோதனை செய்தால் கூட தவறில்லைஎனக் கூறினார்.

மேலும், பிற நாடுகளில் அடையாள அட்டை வழங்க மரபணு சோதனை செய்யப்படுகிறது என்றும் ஆதாருக்கு கைரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்வதில் உரிமை மீறல் கிடையாது என்றும் அவர் வாதாடினார்.

மேலும் படிக்க