• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தினகரன் விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார்

April 27, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னம் பெற இந்தியா தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனை விசாரணைக்காக தில்லி போலீசார் இன்று சென்னை அழைத்து வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட தொடங்கியது. இதன் விளைவாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போது இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.

இதனிடையே இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.60 கோடி வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது தில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவரிடம் 4 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் டிடிவி தினகரன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.இதில் தினகரனின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி, அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார்.

இதனையடுத்து விசாரணைக்காக டிடிவி தினகரனை தில்லி போலீசார்அழைத்துக் கொண்டு சென்னை புறப்பட்டனர். தினகரனுடன் கைது செய்யப்பட்டுள்ள அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க