• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மாக் கடைகளை திறந்ததை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

May 7, 2020 தண்டோரா குழு

டாஸ்மாக் கடைகளை திறந்ததை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில இடங்களில் மட்டும் தளர்வுகளை அறிவித்து அப்பகுதிகளில் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது அதன்படி இன்று முதல் டாஸ்மாக் கடையை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்தது. அந்தந்த டாஸ்மார்க் கடைகளில் முன்பு தடுப்பு வேலிகள் அமைத்து அனைவரும் சில கட்டுப்பாடுகளுடன் மதுக்கடை வாங்கிச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.. அதற்கு தகுந்தவாறு ஏற்பாடுகளும் காவல்துறையினர் செய்திருந்தனர்.

இதனை கண்டித்து பல்வேறு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கட்சியினர் எதிர்ப்புகளை தெரிவித்தனர். அந்த வகையில் இன்று கோவை மாவட்டம் சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் அவர் வீட்டின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதில் திமுக தொண்டர்களும் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூக இடைவெளி விட்டு நின்று முகக் கவசங்கள் அணிந்து மத்திய அரசை கண்டித்து மாநில அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதேபோன்று கோவையில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது என்றும் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும் படிக்க