• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாஸ்மாக் கடைகளைமூட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

May 20, 2017 தண்டோரா குழு

தாய்மார்கள் மூடக்கோரும் டாஸ்மாக் கடைகளை எவ்வித மறுப்புமின்றி உடனடியாக மூட வேண்டும் என்றுசட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகில் உள்ள அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில் ‘டாஸ்மாக்’ கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுக்கடைகளை எதிர்த்துப் போராடும் மகளிருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் போலீசாரின் வன்முறைகளை காணும்போது, தமிழக காவல்துறை தலைவர் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் அந்த இலாகா இருக்கின்றதா,குறைந்தபட்சம் முதல்வரின் கட்டுப்பாட்டிலாவது காவல்துறை இருக்கின்றதா என்ற மிக முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறது.

ஒரு முதலமைச்சர் குடியிருந்த ‘கொடநாடு எஸ்டேட்’ காவலாளியின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவானது மட்டுமல்ல,அந்த கொலையில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் குற்றவாளிகளின் உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லாமல்,அடுத்தடுத்து நடக்கும் மர்ம விபத்துக்கள் போன்ற நிகழ்வுகள், ,திறமைமிக்க தமிழக காவல்துறை “மாலுமி” இல்லாத கப்பல் போல இன்றைக்கு தரைதட்டி நிற்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

தமிழக காவல்துறையின் உளவுத்துறை, சட்டம் – ஒழுங்கு, போலீஸ் சீருடை பணியாளர் வாரியம் உள்ளிட்ட மூன்று துறைகளுக்கு ஒருவரே ’டி.ஜி.பி’ பொறுப்பு வகிக்கும் நிலைமை ஏற்பட்டு இருப்பது உட்பட காவல்துறையில் இப்போது நடந்துவரும் பலவித நிர்வாக அலங்கோலங்கள், ஸ்காட்லாண்ட் யார்டுக்கு இணையாக விளங்கி வந்த தமிழக காவல்துறைக்கு சோதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுக்கடைகளுக்கு எதிரான மகளிர் போராட்டங்களில் மனித உரிமைகளுக்கும், ஜனநாயக உரிமைகளுக்கும் உட்பட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தாய்மார்கள் மூடக்கோரும் டாஸ்மாக் கடைகளை எவ்வித மறுப்புமின்றி உடனடியாக மூட வேண்டும் என்றுமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க