• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மாக்கை உடைத்து 62 மதுப்பாட்டில்கள் திருட்டு

July 15, 2023 தண்டோரா குழு

கோவை ஆவரம்பாளையம் சாலையில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 62 மதுப்பாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்கள்.

கோவை அண்டக்கா பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் காந்தி (43). இவர் கோவை ஆவரம்பாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக்கில் சூப்பரைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் 12 மனிக்கு டாஸ்மாக் கடையை வழக்கம் போல் திறக்க வந்துள்ளார். அப்போது கடையில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையின் உள்ளே சென்று பார்த்த போது மதுப்பாட்டில்கள் கலைந்து கிடைந்துள்ளது.

பின்னர் அவர் சோதனை செய்த போது சுமார் ரூ.10 ஆயிரத்து 400 மதிப்புள்ள 62 மதுபாட்டில்கள் திருடு போய் உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க