• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாஸ்மாக்கு எதிராக போராடுவது பெருங்குற்றமா? – சென்னை உயர் நீதிமன்றம்

May 5, 2017 தண்டோரா குழு

மக்கள் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம் எனப் போராடுவது பெருங்குற்றமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நெடுஞ்சாலை அருகே 500 மீட்டருக்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் வேறு இடங்களில் திறக்க தமிழக அரசு முயன்றது.

இதனால் ஊருக்குள் திறக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருமுல்லைவாயில் பகுதியில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய 21 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணைக்கு இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில், ”மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்பதை நடைமுறையிலும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில், பள்ளி அருகே மதுக்கடை திறப்பு தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்கப்பட வேண்டும்.

யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை அமைப்பதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்கள். டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம் எனப் போராடுவது பெருங்குற்றமா? ” என்றார்.

அதே சமயம் கைது செய்யப்பட்டவர்களின் மீதான முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டது. மேலும் மாற்றி அமைக்கப்பட்ட மதுக்கடைகள் எத்தனை என்பதைக் குறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க