• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெ. மரணத்தையே அரசியலுக்கு பயன்படுத்தும் அளவுக்கு கீழ்த்தரமாக இருப்பார்கள் என நினைக்கவில்லை – ஸ்டாலின்

December 20, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதாவின் மரணத்தையே அரசியலுக்கு பயன்படுத்தும் அளவுக்கு கீழ்த்தரமாக இருப்பார்கள் என நினைக்கவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,

“ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை நானும் பார்த்தேன்.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, பல தகவல்கள் வந்தன. அப்போதே கருணாநிதிசிகிச்சை வீடியோவை வெளியிடக் கேட்டிருந்தார்; அது வெளியிட்டிருந்தால் மக்கள் குழப்பம் தீர்ந்திருக்கும்.ஆனால் ஜெயலலிதாவின் மரணத்தையே கீழ்த்தரமாக அரசியலுக்கு பயன்படுத்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

வீடியோ உண்மையோ, பொய்யோ அதில் தான் தலையிட விரும்பவில்லை, ஜெயலலிதா சிகிச்சை வீடியோ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்குஓட்டுக்கு ரூ.6,000 ஆளுங்கட்சியினர் கொடுப்பதை போலீஸ் வேடிக்கை பார்க்கிறது.தற்போது வீடியோ வெளியீடு விவகாரத்தில் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க