• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெ., உயில் என்னிடம் தான் உள்ளது தீபக்

May 9, 2017 தண்டோரா குழு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஜெயலலிதாவின் உயில் தன்னிடம் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. எனினும், அவரது பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் யாருக்கு சேரும் என்று குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், ஒரு தனியார் ஆங்கில ‘டிவி’ சேனலுக்கு ஜெ. அண்ணன் மகன் பேட்டியளித்தார். அப்போது, என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் என் வசம் தான் உள்ளது. அந்த உயிலில், அனைத்து சொத்துக்களும் என் பெயரிலும், என் சகோதரி தீபா பெயரிலும் எழுதப்பட்டுள்ளன.

அதன்படி,சென்னை போயஸ் கார்டன் பங்களா, சென்னை பார்சன் காம்ப்ளக்சில் உள்ள இரண்டு கட்டடங்கள், சென்னை, செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள ஜெயலலிதா வீடு, கோடநாடு எஸ்டேட், ஐ தராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் உள்ளிட்ட எட்டு சொத்துக்கள் எனக்கு சொந்தம்இவ்வாறு தீபக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க