• Download mobile app
30 Jul 2026, ThursdayEdition - 3823
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவை கடந்த 30 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தினர் ஏமாற்றி வந்துள்ளார்கள் – ஜெ. தீபா

February 14, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதாவைக் கடந்த 30 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தினர் ஏமாற்றி வந்துள்ளதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா புகார் கூறினார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறியதாவது:

சொத்துக் குவிப்பு வழக்கு வழக்கில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. சிறைக்குச் செல்ல வேண்டியவர்கள்தான் செல்கிறார்கள். இந்தத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். எடப்பாடி பழனிச்சாமி தேர்வு என்பது ஜெயலலிதா விருப்பத்திற்கு மாறாக நடந்துள்ளது. சசிகலா குடும்பத்தினர் யாரை விரும்பினாரோ அவர்களுக்குப் பதவியை அளிப்பார்கள் என்பது பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதன் மூலம் தெளிவாகியுள்ளது.

கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம்தான் நடக்கிறது. அவர்கள் யாரை வேண்டுமானாலும் நீக்குவார்கள். யாருக்கு வேண்டுமானாலும் பதவி அளிப்பார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதனை செய்வார்கள். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலாவைப் பொதுமக்கள் என்றும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

ஜெயலலிதாவைக் கடந்த 30 ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தினர் ஏமாற்றி வந்துள்ளார்கள். அம்மாவின் வாரிசுகள் உடன் இணைந்து செயல்படுவதை வரவேற்பதாக கூறியுள்ள முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நன்றி. விரைவில் எனது திட்டத்தை நான் வெளியிடுவேன்”.

இவ்வாறு தீபா கூறினார்.

மேலும் படிக்க