• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் வாகன விபத்தில் பலி

April 29, 2017 தண்டோரா குழு

போலீசாரால் சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவுடைய முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், ஆத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

கடந்த 24ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில்,மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம், 2012-ம் ஆண்டில் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கனகராஜ் சேலம் ஆத்தூரில் வாகன விபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து, விபத்து தற்செயலானதா? திட்டமிடப்பட்டதா?என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க