• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜூலை 31 க்குள் ஆபாச இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு

April 21, 2017 தண்டோரா குழு

குழந்தைகளை கொண்ட ஆபாச இணையதளங்களை ஜூலை 31ம் தேதிக்குள் முடக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மின்னணு மற்றும் தகவல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

“வெளி நாடுகளிலிருந்து இயங்கும் சுமார் 1,5௦௦ ஆபாச தளங்களை முடக்க வேண்டியது அவசியம். இந்த ஆபாச தளங்ககளை கண்காணிக்க இந்தியாவில் மையப்படுத்தப்பட்ட முறைகள் இல்லாததால், இந்த தளங்களை முடக்க முடிவதில்லை” என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2௦13ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மன்றம் அளித்த அறிவுரைபடி, குழந்தைகளில் ஆபாச புகைபடங்கள், வீடியோ அடங்கிய இணையதளங்களை முடக்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க