• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜாமீன் கோரி வைகோ மனுதாக்கல்

May 23, 2017 தண்டோரா குழு

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி வைகோ மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் இந்தாண்டு ஏப்ரல் 3-ம் தேதி, எழும்பூர் நீதிமன்றத்தில் வந்த போது வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் இல்லையேல் தன்னை கைது செய்ய வேண்டும் என்று வைகோ மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைகோவுக்கு ஜாமீன் வழங்க முன் வந்தார். ஆனால் ஜாமீன் பெற மறுத்த வைகோ சிறைக்குச் சென்றார். 50 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் வைகோ அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வைகோ ஜாமீன் கோரி இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

பிணாங்கு துணை முதல்வர் ராமசாமியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வைகோ ஜாமீன் கோரியுள்ளார் என்று ம.தி.மு.க. வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க