• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்பி எடுத்த வாலிபரை மிதித்து கொன்ற யானை

November 25, 2017 தண்டோரா குழு

மேற்குவங்கத்தில் ரோட்டில் நின்ற யானையுடன் செல்பி எடுக்க முயன்ற வாலிபரை யானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பாய்க் கிரி மாவட்டம் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. இந்த சுற்றுலாத் தளங்களை பார்ப்பதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவது வழக்கம். இந்நிலையில், அப்பகுதியில் சாதிக் ரஹ்மான் என்பவர் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக யானை ஓன்று நடந்து கொண்டிருந்தது. யானை கண்ட சாதிக் காரில் இருந்து இறங்கி அதன் முன் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது அவரை கண்ட யானை வேகமாக ஓடிவந்து ஆக்ரோசத்துடன் அவரது உடைத்து, இதனால் அதிர்ச்சியடைந்த சாதிக் தப்பி ஓட முயன்ற்றுள்ளார். அப்போது யானை அவரை காலால் மிதித்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அங்கிருந்த சுற்றுலாப்பயணி ஒருவர் செல்போன் மூலம் படம் படித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க