January 28, 2019
தண்டோரா குழு
சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான எட்டு இடங்களில் சுழலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரை விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் இடம். பொதுமக்களுடைய வசதிக்காக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியின் கீழ் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான எட்டு இடங்களில் சுற்றி சுழலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்தக் கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை சென்னை ரிப்பன் மாளிகைக் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை இரண்டாம் தளத்தில் அமையவுள்ளது.