• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விவசாயிகள் அனாதை இல்லை என்பதை இளைஞர்கள் உணர்த்தியுள்ளனர் – அய்யாகண்ணு

April 13, 2017 தண்டோரா குழு

தமிழக விவசாயிகள் அனாதை இல்லை என்பதை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உணர்த்தியுள்ளனர் என தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு கூறியுள்ளார்.

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் தில்லியில் 3௦ நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் மாணவர்கள்,இளைஞர்கள் என பலரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“ தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் அனாதைகள் இல்லை என்று சென்னையில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் மூலம் நிரூபித்து விட்டனர்.

மாணவர்கள், இளைஞர்கள், மக்கள் என அனைவரும் விவசாயிகளுக்காக உரிமைக் குரல், போர் குரல் கொடுத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் மூலம் நாங்கள் இன்னும் தீவிரமாக போராட வேண்டும் என்ற உத்வேகம் கிடைத்துள்ளது.

மாணவர்களின் போராட்டம் எங்களுக்கு மிகுந்த ஆறுதலை தருகிறது. எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்,” என்றார் அய்யாகண்ணு.

மேலும் படிக்க