• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் உள்ள பிரபல ஐ.டி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

January 30, 2019 தண்டோரா குழு

சென்னையில் உள்ள பிரபல ஐ.டி நிறுவனத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அந்நிறுவன நிர்வாகத்தினரிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பttuட்டு வரும் எல்காட் செஸ் (ELCOT SEZ) என்ற ஐ.டி நிறுவனத்திற்கு இன்று இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் ” நாங்கள் உங்களது நிறுவனத்தை கண்காணித்து கொண்டிருக்கிறோம். இன்னும் 7 மணி நேரத்தில் நாங்கள் வைத்த குண்டு வெடிக்கும். நாங்கள் நிறைய நிறுவனங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளோம் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் ஐ.எஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும் படிக்க