• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுரங்கப்பாதை மெட்ரோ ரயிலில் செல்போன் சிக்னல் கிடைக்காது

May 13, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் நாளை தொடங்கவுள்ள முதல் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவையில் செல்போன் சிக்னல் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து பரங்கிமலை வரையும், சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்கவழி மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் தொடங்குகிறது. எட்டு கி.மீட்டர் தொலைவுக்கு இந்த சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மெட்ரோ ரயில், சுரங்க வழி பாதையில் செல்வதால், ரயில் பயணத்தின்போது செல்போன் சிக்னல் கிடைக்க வாய்ப்புகள் இல்லை எனவும், விரைவில் சுரங்கபாதை ரயில் நிலையங்களில் செல்போன் சிக்னல் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் எனவும், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க