March 22, 2020 தண்டோரா குழு
கோவையில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மாநகர முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று நாடு முழுவதும் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சி உரையில் பேசிய பிரதமர் மோடி, இந்த உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவை இன்று கடைபிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை முழுவதும் சிற்றுந்துகள் ,கடைகள், ரயில்கள், பொதுப்பேருந்து,இயங்காமல் வெறிச்சோடி காணப்படுகிறது.“ஒன்பது அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் அறிவுறுத்தியதை தொடர்ந்து இன்று காலை, 7மணி முதல் இரவு, 9மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை கோவை மாவட்ட மக்கள் பின்பற்றி வருகின்றனர்.