• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுதந்திர தினவிழாவில் சிறந்த இந்திய குடிமகன் எனும் விருதுகள் வழங்கி கௌரவித்த பாரதமாதா அறக்கட்டளை

August 16, 2025 தண்டோரா குழு

கோவை செளரிபாளையம் பகுதி உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் இந்திய தேசத்தின் 79-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் உடையாம்பாளையம் பாரத மாதா திடலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் M.கெளரி சங்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் துப்புரவு பணியாளர் பிரதிமா, வழக்கறிஞர் சுபாசினி ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்கள்.காந்திநகர் நாகராஜ் தேசத்தலைவர்கள் உடன் கூடிய பாரதமாதாவின் திருவுருப்படத்திற்கும், மதநல்லிணக்கத்தின் அடையாளமாக மும்மதங்களின் புனித நூலான பகவத்கீதை- குர்ஆன் பைபிள் நூல்களுக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்து வணங்கினார்.

அன்னை ஆட்டோ கேரேஜ் நிறுவனரும், தொழிலதிபரும்,சமூக சேவகருமான சண்முகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.இலட்சியத்துளி மக்கள் அமைப்பின் நிறுவனர் தினேஷ்குமார் அவர்கள் உலக சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக சமாதான புறாக்களை பறக்க விட்டு சிறப்புரையாற்றினார்.மாஸ்டர் சிலம்பம் நிறுவன ஆசிரியர் ஆனந்தன் அவர்கள் கோவை மாநகர காவல் துறை, உயிர் அமைப்புடன் இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கோவை மாவட்ட நூலக ஆணைக்குழு -பள்ளி கல்வித்துறை,செளரிபாளையம் மகாகவி பாரதி அம்மன் அடிமை அரசு பொது நூலக வாசகர் வட்டத்துடன் இணைந்து வாசிப்பை நேசிப்போம் புத்தக விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து செளரிபாளையம் -உடையாம்பாளையம் சாலைகள் வழியாக பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுடன் உடன் சிலம்ப மாணவர்களின் சிலம்ப விளையாட்டுகளுடன் ஊர்வலமாக வலம் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்பித்தார்கள்.

சமூக சேவகர் முரளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்,எழுது பொருள்கள்,இனிப்புகள், பிஸ்கட் பாக்கெட்களை வழங்கி சிறப்பித்தார்கள்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதான உணவை குமாரபாளையம் ஸ்ரீ குகன் கேட்டரிங் நிறுவனர் சங்கர் அவர்கள் பெருந்துறை பகுதியைச் சார்ந்த கெளரி பிரகாஷ் ரிகாஷினி அவர்களுடன் இணைந்து வழங்கி சிறப்பித்தார்கள்.

விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் சிறந்த இந்திய குடிமகன் எனும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.விழாவில் தபால் ஊழியர் ஸ்ரீதர், சிவக்குமார்,ஸ்ரீ தர்ஷினி ஏஜென்சிஸ் நிறுவனர் கார்த்திக்,சஞ்சய் மற்றும் இலட்சிய துளி மக்கள் அமைப்பின் நிர்வாகிகள் ரஞ்சித், ஆன்டனி, ரெக்ஸ், லியாண்டர்,அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க