• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீனா வரை சென்ற அமைச்சரின் தெர்மாகோல் திட்டம்

April 29, 2017 தண்டோரா குழு

சீன நாட்டின் நாளிதழில் தமிழக அமைச்சர் வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாகோல் வாய்த்த செய்தியை படத்துடன் வெளியிட்டுள்ளது.

வைகை ஆற்றில் நீர் ஆவியாவதை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் 10 லட்சம் ரூபாய் செலவில் தர்மாகோல் கொண்டு மூடப்பட்டது. ஆனால் அதை மூடிய சில நிமிடத்தில் தர்மாகோல் எல்லாம் பறந்தன. இத்திட்டத்தை, வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் எனசமூக வலைத்தளங்ககளில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ராதா ரவியும் தெர்மாகோல் திட்டத்தை கிண்டலடித்து பேசினர்.

இத்திட்டம் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் பரவலாக பேசபட்டு வருகிறது.

இந்நிலையில், சீன நாட்டின் நாளிதழில் தமிழக அமைச்சர் வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாகோல் வாய்த்த செய்தியை படத்துடன் வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் “ மானம் கப்பல்ல ஏறிடுச்சுனு கேள்வி பட்டுருப்போம் இப்ப விமானமே ஏறி சீனாவுக்கெல்லாம்போயிட்டிருக்கு “ என்று கலாய்த்து வருகின்றனர்.

மேலும் படிக்க