• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீனா உருவாக்கியுள்ள முதல் சரக்கு விண்கலம்

April 18, 2017 தண்டோரா குழு

உபகரணங்களை விண்வெளிக்கு எடுத்துச்செல்லும் தியான்ஷு -1 என்னும் விண்கலத்தை சீனா உருவாக்கியுள்ளது. இந்த விண்கலம் வரும் ஏப்ரல் 24-ம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

“தென் சீனாவின் ஹைனன் மாகணத்திலுள்ள வெஞ்சேன் என்னும் இடத்தில் மண்டல சோதனை மையம் உள்ளது. அந்த மையத்தில் வைக்கப்படிருந்த சரக்கு விண்கலம் லாங் மார்ச் 7 Y2 என்னும் ராக்கெட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது,” என்று சீனா விண்வெளி அலுவலகம் திங்கள்கிழமை(ஏப்ரல் 17) தெரிவித்துள்ளது.

வரும் 2௦22-ம் ஆண்டுக்குள், ரஷ்ய இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன்(ISS)க்கு போட்டியாக சீனா நிரந்தர விண்வெளியை அமைக்க மும்மரமாக செயல்பட்டு வருகிறது.

சீனாவால் உருவாக்கப்பட்ட முதல் சரக்கு விண்கலம் தியான்ஷு -1 ஆகும். இது விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் தியாங்காங்-2 ஆய்வு மையத்துடன் இணையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பூமிக்கு திரும்பும் முன் நியூட்டனின் ஈர்ப்பு கோட்பாடு அல்லாத ஒரு புதிய விண்வெளி ஆராய்ச்சியை சீனா இந்த சரக்கு விண்கலம் மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் கருதப்படுகிறது.

மேலும் படிக்க