• Download mobile app
28 Apr 2026, TuesdayEdition - 3730
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீக்கியர்கள் தலைப்பாகை, தாடியுடன் காவல்துறையில் பணியாற்ற அனுமதி

December 30, 2016 தண்டோரா குழு

நியூயார்க் நகர் காவல்துறை அதிகாரிகளாகப் பணிபுரியும் சீக்கியர்கள் தலைப்பாகை, தாடியுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, காவல் துறை பயிற்சி பெற்றோருக்கான பட்டமளிப்பு விழாவை அடுத்து காவல்துறை ஆணையர் ஜேம்ஸ் ஒ நீல் புதன்கிழமை (டிசம்பர் 28) கூறியதாவது:

அணைத்து மத உறுப்பினர்களுக்கும் பொதுவான புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சீக்கியர்கள் தங்களது மதக் கட்டளையின்படி தாடியுடனும் தலைப்பாகையுடனும் தாங்கள் பணி புரிய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களுடைய கோரிக்கைக்கு மதிப்பளித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி சீக்கிய இனத்தை சேர்ந்த காவலர்கள் NYPD எனப்படும் நியூயார்க் நகர காவல்துறை பிரிவு முத்திரை கொண்ட கருநீல தலைப்பாகை அணிய வேண்டும். முகத்தில் இருந்து ஒன்றரை அங்குலத்துக்கு மிகாத தாடியை அவர்கள் வைத்துக்கொள்ளலாம்.

தற்போது நியூயார்க் நகர காவல்துறையில் 16௦ சீக்கியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுடைய எண்ணிகையை அதிகரிக்க மேலும் பல திட்டங்களை வகுத்து வருகிறோம்.

இவ்வாறு காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

இந்த முடிவுக்கு நியூயார்க் நகர் காவல்துறையில் பணியாற்றும் சீக்கியர்கள் வரவேற்று, நன்றி செலுத்தியுள்ளனர். இந்த அறிவிப்பு அமெரிக்க நாட்டில் வசிக்கும் சீக்கிய இனத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க