• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறை விதிகளை மீறும் சசிகலா

April 6, 2017 தண்டோரா குழு

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா நடராஜன் பெங்களூர் பரப்பனா அக்ரஹரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதுவரை அவரை 19 பேர் சந்தித்துள்ளனர் என்று தகவல் அறியும் சட்டம்(RTI) வெளிப்படுத்தியுள்ளது.

பொதுவாக குற்றவாளிகளை அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் சந்திக்க வேண்டும் என்று சட்டமுண்டு. ஆனால், சசிகலாவை அவரது கணவர் நடராஜன், வழக்கறிஞர்கள், டிடிவி. தினகரன், குடும்ப உறுப்பினர்கள், வளர்மதி, கோகுல இந்திரா போன்ற கட்சி நிர்வாகிகள் உட்பட 19 பேர் சந்தித்துள்ளனர். பார்வையாளர்கள் யாரும் 5 மணிக்கு மேல் சிறைக்கு வந்து கைதிகளை சந்திக்க கூடாது என்பது சிறையின் கட்டளை.ஆனால் சசிகலாவை சிலர் 6 மணிக்கு மேல் வந்து சந்தித்துள்ளனர்.

மேலும் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் அதிமுக பொது செயலாளர் சசிகலாவிற்கு எந்த சிறப்பு சலுகையும் தரப்படமாட்டாது என்றும் அவரை மற்ற சிறை கைதியை போல் தான் நடத்தப்படுவார் என்று உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

ஆனால் தற்போது சிறை சட்டங்கள் அவமதிக்கப்படும் நிலையில் இருக்கிறது. இரட்டை இலையை தங்களுக்கு தர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை அணுகும் முன்பாக மக்களவை துணை சபாநாயகர், தம்பிதுரை மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் சசிகாலவை பெங்களூர் சிறையில் சந்தித்துள்ளனர்.இது தவிர சசிகலாவை தமிழ்நாட்டு சிறைக்கு மாற்ற டி.டி.வி. தினகரன் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க