• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறுவாணி அணை நீர் மட்டம் 40.80 அடியாக சரிவு

December 18, 2020 தண்டோரா குழு

கோவை சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாத காரணத்தினால் அணையின் நீர்மட்டம் 40.80 அடியாக சரிந்துள்ளது.

கோவை மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக சிறுவாணி நீர் கருதப்படுகிறது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கும், நுாற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்கும் சிறுவாணி அணை நீர் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது. சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நீரை தேக்க முடியும். 49.53 அடி உயரம் கொண்ட இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 878.5 மீட்டர் உயரமுள்ளது. 650 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டது.

சிறுவாணி அணை பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்து வந்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 45 அடி வரை உயர்ந்தது. இதனிடையே தற்போது மழை இல்லாத காரணத்தினால் அணையின் நீர்மட்டம் 40.80 அடியாக சரிந்துள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி சார்பாக அணையிலிருந்து 97 எம்.எல்.டி நீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 88 எம்.எல்.டி நீர் மட்டுமே குடிநீருக்காக எடுக்கப்படுகிறது.

மேலும் படிக்க