• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிரியாவில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய புகைப்பட நிபுணர்

April 20, 2017 தண்டோரா குழு

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவனின் உயிரை புகைப்பட நிபுணர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்ளநாட்டு போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். அந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகளால் முடியவில்லை.

அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் மக்களால் பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

புகைப்பட நிபுணர் அப்த் அல்காதர் ஹபக் என்பவர் சிரியாவில் பணிபுரிந்து வருகிறார். அவர் பணிபுரியும் இடத்தில் நடந்த வெடிகுண்டு விபத்தில் அவரும் சிக்கி பலத்த காயங்களுடன் மயக்கம் அடைந்துள்ளார். அவர் கண் விழித்த போது, அந்த இடம் முழுவதும் சேதமடைந்து, குழந்தைகளுடைய இறந்த உடல்களை கண்டார்.

உடனே அவர் காயமடைந்த மக்களுக்கு உதவ தொடங்கினார். அவருக்கு உதவியாக அவருடைய நண்பரும் களத்தில் இருந்தார். அப்போது ஒரு சிறுவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான் அவனை காப்பற்ற அவர் தனது காயத்தையும் பொருட்படுத்தாது சிறுவனை தூக்கி கொண்டு ஓடி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிறுவனின் உயிரை காப்பாற்றினார்.

மற்றொரு புகைப்பட நிபுணர் எடுத்த புகைபடத்தில், ஹபக் ஒரு குழந்தையின் இறந்த உடலை கண்டு, மண்டியிட்டு கதறி அழுவும் காட்சி இருந்தது. அதை பார்த்தவர்களுடைய உள்ளம் உடைந்துவிட்டது.

மேலும் படிக்க