January 17, 2019
தண்டோரா குழு
இளைஞர் ஒருவர் சினை ஆடு ஒன்றை பாலியல் வன்புணர்வு செய்ததால் பரிதாபமாக மரணமடைந்துள்ளது.
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தின் பர்சா பஜார் பகுதியைச் சேர்ந்தவர் மகாஜினி தேவி இவர் வீட்டில் 3 மாத சினை ஆடு ஒன்றை வளர்த்து வந்தார். இந்நிலையில் மகாஜினி தேவி வளர்த்து வந்த ஆட்டை கடந்த 15ம் தேதி இரவில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த சினை ஆடு பரிதாபமாக பலியானது.
இதனைக் கண்ட சிறுவர், சிறுமிகள் ஊர் பொதுமக்களிடம் கூறியுள்ளனர். பின் அந்த இளைஞரை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மகாஜினி தேவியின் புகாரின் பேரில்முகமது சிர்மன் (வயது 27) கைது செய்யப்பட்டார். தினக்கூலியாக பணிபுரிந்து வரும் முகமது சிர்மன் மதுபோதையில் இந்த செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது.இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் இளைஞரிடம் மது எப்படி கிடைத்தது என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
முறையற்ற பாலியல் உறவு, விலங்கை கொலை செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முகமது சிர்மன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இறந்த ஆட்டின் உடல் பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கடந்த ஆண்டு இதே போன்று ஹரியானாவில் சினை ஆடு ஒன்றினை 8 பேர் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது
குறிப்பிடத்தக்கது.