December 10, 2020
தண்டோரா குழு
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் மரணம் குறித்து பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பி இருந்தனர். இதையடுத்து, சித்ராவின் உடல் கூறாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரேத பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கையின்படி சித்ரா தற்கொலை செய்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், சித்ராவின் கன்னத்தில் இருந்த கீறல் அவருடைய நகக்கீறல் என்றும் தெரிவித்துள்ளனர்.இதைத்தொடர்ந்துசித்ரா தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.