• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிக்கன் சாப்பிட ஒருவாரம் லீவ் ! வைரலாகும் ரயில்வே ஊழியரின் விண்ணப்பம்

June 23, 2017 தண்டோரா குழு

சிக்கன் சாப்பிட ஒரு வாரம் லீவு வேண்டும் என கேட்ட ரயில்வே ஊழியரின் விண்ணப்பம் சமூகவலைதளத்தில் வைராலாக பரவி வருகிறது.

பள்ளி, கல்லூரி, அலுவலங்களில் பணிபுரிவோர் விடுமுறை வேண்டும் என தங்கள் உயரதிகாரிகளுக்கு விடுப்பு விண்ணப்பம் அளிப்பது வழக்கம். அதிலும் பெரும்பாலானோர் உடல்நிலை சரியில்லை, அல்லது சுற்றுலா, வெளியூர் செல்வதற்காக விடுமுறை கேட்பது வழக்கம்.

ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூர் ரயில்நிலையத்தில் பணிபுரிந்து வரும் பகைராஜ் கோண்ட் என்பவர் கடந்த ஜூன் 17ல் மிகவும் வித்தியாசமாக ஒரு வாரத்திற்கு விடுமுறை கேட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கும் போது புனித சர்வான் என்ற இந்து பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்த பண்டிகை தொடங்கியதும், ஒரு மாதத்திற்கு அசைவ உணவை சாப்பிடக்கூடாது என்பது வழக்கம்.

இதனால் பகைராஜ் கோண்ட் தனது விண்ணப்பத்தில், புனித ஷ்ரவான் மாதம் ஒருவாரத்தில் தொடங்க இருக்கிறது. அந்த மாதம் தொடங்கினால் என்னால் கோழி இறைச்சி உணவை எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, ஷ்ரவான் மாதம் தொடங்குவதற்கு முன்பாக கோழி இறைச்சி உணவை எடுத்துக் கொள்ள ஜூன் 20 முதல் 27ம் தேதி வரை விடுமுறை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கோழி இறைச்சியை எடுத்துக் கொள்ளாவிட்டால், உடல் பலவீனமடைந்து, தனது வேலையினை சரிவர செய்ய முடியாது என்றும் கோண்ட் கூறியிருக்கிறார். தற்போது அவரது இந்தக் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் படிக்க