• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி

December 15, 2017 தண்டோரா குழு

சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவு நாளை தினத்தையொட்டி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்திய நாட்டின் பெருந்தலைவர்களில் ஒருவரான சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராக பதவி வகித்தார். அதோடு இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
கடந்த 195௦ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி,‘இரும்பு மனிதர்’ என்று போற்றப்பட்ட அவர், தனது 75வது வயதில் காலமானார்.

இந்நிலையில், அவருடைய நினைவு நாளையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டரில் “பெருந்தலைவர் சர்தார் வல்லபாய் பட்டேல் மறைந்த தினத்தில் அவரை நினைவுகூர்வோம். தேசத்திற்காக அவர் ஆற்றிய முக்கிய பணிக்கு, ஒவ்வொரு இந்தியனும் கடமைப்பட்டுள்ளோம்” என்று பதிவிட்டு இருந்தார்.

இந்தியாவின் சிறு சிறு மாநிலங்களை ஒன்றாக இணைத்து, நாட்டின் ஐக்கியப்படுத்தியத்தில், பட்டேல் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க