• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்தார் வல்லபாய் படேல் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்.

February 14, 2020

கோவை அவினாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியை மத்திய அரசு தமிழ்நாடு கீழ் கொண்டு வர கோரி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது அந்த கல்லூரியானது ஜவுளி துறையின் கீழ் செயல்பட்டு வருதாகவும் அதனால் கல்வி கட்டணம் போன்றவை உயர்ந்து கொண்டே போவதாகவும், அடிப்படை வசதிகளான விளையாட்டு மைதான கட்டணங்கள் உயர்ந்து கொண்டே இருபதாகவும் கூறி எனவே இதை மத்திய பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் (CUTN) கீழ் கொண்டுவர கோரி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு கொண்டு வந்தால் கல்வி கட்டணங்கள் குறையும் அடிபடை வசதிகள் அனைத்து தங்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்தனர்.இதற்கு தீர்வு காண காவல்துறையும், கல்லூரி நிர்வாகமும் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் யாரும் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியே வராதவாறு கல்லூரி வளாக கதவுகளை மூடியதால் அனைவரும் கல்லூரி வளாகத்தின் உள்ளேயே இருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க