• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த விதியில் இடமில்லை”

March 10, 2017 தண்டோரா குழு

சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவதற்கு சட்டப் பேரவை விதிகளில் இடமில்லை என்று தமிழக சட்டப் பேரவையின் செயலர் ஜமாலுதீன் தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரியும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை வெளியேற்றியதை எதிர்த்தும், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொர்பாக பேரவைச் செயலர் ஜமாலுதீன் பதில் மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

அதில், “தமிழக சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு பேரவை விதிகளில் இடமில்லை. சட்டப் பேரவையில் தி.மு.க., உறுப்பனர்கள் அமளியில் ஈடுபட்டதால்தான் வெளியேற்றப்பட்டனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க