• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டபேரவைக்குள் அமர்ந்து ஸ்டாலின் தர்ணா போராட்டம்

February 18, 2017 தண்டோரா குழு

சட்டபேரவைக்குள் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட சட்டபேரவை உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வாராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி 15 நாட்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்தார். இதையடுத்து, இன்று(பிப் 18) நம்பிக்கை வாக்குகெடுப்பு சிறப்புப் சட்டபேரவை கூட்டம் கூடியது.

இதில் ஆரம்பம் முதல் அமளியில் ஈடுபட்ட ஓபிஎஸ் தரப்பினர் மற்றும் திமுகவினர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வாக்கெடுப்பு வேறொரு நாளில் நடத்த வேண்டும் என்றும் வலியுறித்தினர். இதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தார். இதனால் சபாநாயகரை முற்றுகையிட்ட திமுக எம்எல்ஏக்கள் அவரது இருக்கை மற்றும் மைக்கை உடைத்தனர்.

இதனால், அவை மதியம் ஒரு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். அதன் பின் மீண்டும் தொடங்கிய சட்டபேரவை கூட்டம் கூடியது. இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பிற்க்கு முன்மொழிந்தார். ஆனால், திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து சபாநாயகரை முற்றிகையிட்டும் மேஜை மீது ஏறியும், காகிதத்தை கழித்தும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், திமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து, திமுக உறுப்பினர் வெளியேறாமல் கூச்சலில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து அவை மீண்டும் 3 மணி வரை ஒத்திவைக்கபட்டது.

இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் மா.சுப்ரமணியம், சுந்தர், நந்தகுமார், ராஜேந்திரன், பிரகாஷ், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 20 சட்டபேரவை உறுப்பினர்கள் அவை காவலர்களால் குண்டுகட்டாக வெளியேற்றபட்டனர்.

இந்நிலையில், திமுக செயலர் தலைவரும், சட்டபேரவை எதிர்கட்சி தலைவருமான முக.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் சட்டபேரவைக்குள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க