• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணம்

April 15, 2017 தண்டோரா குழு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

சசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன். அவருக்கு வயது 47. இவர் திருவிடைமருதூர் கோயிலுக்கு இன்று காலை சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.இவர் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க