• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வேளாண் பல்கலைகழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா

January 15, 2020 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பண்ணை மேலாண்மை துறை சார்பில், இன்று பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இன்று காலை நடந்த பொங்கல் விழாவுக்கு, 10 ஜோடி மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.சூரியனுக்கு படையல் வைத்து பொங்கலை மாடுகளுக்கும் உண்ண கொடுத்தனர். வேளாண் பல்கலையில் உள்ள, பருத்தி, நெல் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பணிபுரியும் விவசாய பண்ணை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.கயிறு இழுக்கும் போட்டிகள், சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் பரிசுகளை வழங்கினார்.

அப்போது வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறுகையில்,

“பொங்கல் விழா என்பது உழவர்களுக்கு மட்டுமல்ல. உழவுத் தொழிலோடு சம்பந்தப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் சேர்த்து கொண்டாடப்படும் பொதுவான விழாவாகும். இவ்விழாவினை பார்ப்பதற்காக 65 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் இருந்து வந்த ஆராய்ச்சியாளர் தற்போது மீண்டும் தங்களது குடும்பத்துடன் வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் 13 புதிய ரகங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டதாக தெரிவித்தார். அதில் வேளாண்மையில் 7 ரகங்களும், தோட்டக்கலையில் 6 ரகங்களும் விஞ்ஞானிகளின் முயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார்.

வேளாண்மையில் வறட்சி மற்றும் தண்ணீர் குறைவான பகுதிகளில் நெல் பயிரிட ஏதுவாக கோ 53 என்ற பதிய ரகத்தை உருவாக்கி உள்ளதாகவும், உளுந்தில் தேமல் நோய் வராமல் தடுக்கும் வகையில் புதிய ரகத்தை கண்டுபிடித்துள்ளதாகவும், சோளம் மற்றும் தினையில் புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தக்காளியில் புதிய வீரிய ஒட்டு ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், அதில் நாட்டு தக்காளியினுடைய சுவை அதிகம் இருக்கும் எனவும், ஹெக்டேருக்கு மற்ற தக்காளியை காட்டிலும் , உற்பத்தியின் அளவு அதிகரிக்கும் என்றார். வேளாண் மக்கள் உழவுத்தொழில் செய்து அறுவடை செய்த தானியங்களை, இயற்கையின் கடவுளான சூரியனுக்கு படைத்து மகிழ்கின்ற நாளாக, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது என கூறினார்.

வேளாண் பல்கலை துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர். இதில் பட்டி மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 9 திரவியங்கள் நிறப்பப்பட்ட பாத்தியில் பசு மாட்டை மிதிக்க வைத்து, எந்த பாத்தியில் மிதிக்கிறதோ அந்த வளம் பெருகும் என்பது ஐதீகம்.இந்த ஆண்டு நெல் பயிரை மிதித்து உள்ளது. இந்தாண்டு விவசாயிகளுக்கு பொங்கல் பரிசாக 13 வகை புதிய பயிர் ரகங்களை அறிமுகம் செய்து உள்ளனர். இவைகள் அனைத்தும் கால நிலைக்கேற்ப விளைச்சல் தரும் என பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

மேலும் படிக்க